யாழ். கிளிநொச்சி பெண்கள் பணத்திற்காக ஓமானில் விற்பனை! தப்பி வந்த பெண் அதிர்ச்சித் தகவல்!!

யாழ. மற்றும் கிளிநொச்சி வவுனியா, திருகோணமலை பகுதியில் உள்ள தமிழ் குடும்ப பெண்களை ஓமாணில் அதிக பணத்திற்காக விற்றுவருவதாக தப்பி வந்த பெண் அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மேலும் அந்நாட்டில் அதிக கொடுமைகளுக்கு முகம் கொடுத்து வந்துள்ளதாகவும். ஒவ்வொரு நொடியும் தமிழ் பெண்கள் அங்கு கொடுமைசெய்யப்படுகிறார்கள் என அவர் அதிர்ச்சி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அந்நாட்டில் சிக்கி தவிக்கும் பெண்களை காப்பாற்றுமாறு பொலிஸாரிடம் யுவதி வேண்கோள் விடுத்துள்ளார்.

அத்துடன் தாங்கள் செலுத்திய பணத்தை மீளப் பெற்றுத் தருமாறும், முகவர்களைகளைக் கைது செய்யுமாறும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.