யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் அம்பலவாணர் சிவபாலசுந்தரன்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக இன்றைய தினம் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பெற்றுக் கொள்வதற்காக சென்ற அரசாங்க அதிபரை மேலதிக அரசாங்க அதிபர் ம பிரதிபன் மற்றும் மாவட்ட செயலக அதகாரிகள் பிரதேச செயலாளர்கள் ஆகியவர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து மங்கள விளக்கினை ஏற்றி பதிவேட்டி கையொப்பமிட்டு யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.