2022ம் ஆண்டிற்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன்(20.01.2023) நிறைவடைகின்றன.
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை வரும் திங்கள் கிழமை ஆரம்பமாக உள்ள நிலையில் நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமையுடன் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கை தொடர்பான மேலதிக செயலாளர் இது தொடர்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் (20.02.2023) அன்று மீள ஆரம்பிக்கப்படும்.