எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் கறுப்பு வாரமாக பிரகடனப் படுத்த இருக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடுகள் மற்றும் அரசின் தன்னிச்சையான வரி திருத்தம் போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ‘கறுப்பு வாரம்’ ஆக பிரகடனப்படுத்த உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டுளதாகவும் அதற்க்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

மேலும் அதற்கமைய கொழும்பிலும் ஒரு எதிர்ப்பு இயக்கம் ஏற்பாடு செய்யபட்டுள்ளதாகவும் நேற்றைய தினம்ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அதனை கூறியுள்ளார்.