மின்னல் வேக ஓட்டக்காரர் உசைன் போல்ட் கணக்கில் இருந்து பாரிய நிதி மோசடி!

உலகின் மின்னல் வேக ஓட்டக்காரர் என்று அழைக்கப்படும் தடகள வீரர் ஆன உசைன் போல்ட்டிடம் இருந்து சுமார் 103 கோடி ரூபாய் நிதி மோசடிக்கு செய்யப்படிருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இது குறித்து அவரது  வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.

உசைன் போல்ட் ஜமைக்காவை சேர்ந்தவர் இவர் , 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 4×100 ரிலே போன்றவற்றில் உலக சாதனை படைத்துள்ளார்அதனைவிட . 2008, 2012, 2016 என தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக்கில் போட்டிகளில் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தை வென்றவர். கடந்த 2017ம் ஆண்டில் ஓய்வையும் பெற்றுள்ளார்.

இவ்வாறு இருக்கையில் அந் நாட்டின் கிங்ஸ்டன் நகரில் இயங்கி வரும் நிதி முதலீட்டு நிறுவனம் ஒன்றில் அவரது கணக்கில் இடப்படிருந்த  12.7 மில்லியன் டொலர்கள் மாயமாகி உள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தற்போது அந்த நிறுவனத்தின் கணக்கில் இவரது பெயரில் 12 ஆயிரம் டொலர்கள் மட்டுமே இருப்பதாகவும் மோசடி செய்யப்பட்ட அவரது பணத்தினை மீண்டும் தராது விடும் பட்சத்தில் நீதி மன்றத்தை நாட இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இது குறித்து குறித்த நிதி நிறுவனம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது அவர்களது நிறுவனத்தில் பணியாற்றும்  முன்னாள் ஊழியர் ஒருவர் இவ்வாறு பல மோசடிகளில் ஈடுபடுள்ளார் எனவும் இது குறித்து  ஜமைக்கா நாட்டின் நிதி மோசடி தடுப்புக் குழு விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் இவரால் பல் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது .

எனினும் உசைன் போல்ட் இந்த மோசடியில் இருந்து தனது பணத்தை மீட்டெடுக்க முடியும் என நம்புவதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.