அரச வாகன பாவனை குறித்து சர்ச்சையில் சிக்கிய கோட்டாபய! வெளியான அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 19 அரசாங்க வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்துவதாக ஊடகங்களில் வெளியான செய்தியை மறுத்துள்ளார்.

இந்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட பாவனைக்காக அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தனிப்பட்ட வாகனத்தை மாத்திரமே பயணத்திற்கு பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.