12,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யும் கூகுள்

கூகுளின் தாய் நிறுவனமான எல்பாபெட், உலகம் முழுவதும் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் 10,000 வேலைகளை குறைக்கும் திட்டத்தை அறிவித்த ஒரு நாளில் கூகுளின் அறிவிப்பு வந்துள்ளது.

இந்த பணிநீக்கம் குறித்து, எல்பாபெட் மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்த் பிச்சை, ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் கூகுள் இணைந்துள்ளது.

செப்டம்பர் 2022 நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1.86 லட்சம். இதில் சுமார் 5,000 பேர் இந்தியாவை விட்டு வெளியேறினர்.

இந்த மாத தொடக்கத்தில், அமேசான் 10,000-18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்தது. இவா்களில் இந்தியாவைச் சோ்ந்தவா்கள் சுமார் 1,500 போ் என்பது குறிப்பிடத்தக்கது.