தென்னிலங்கையில் இடம்பெற்ற மற்றுமோர் பஸ் விபத்து!

தென்னிலங்கையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மற்றுமோர் பஸ் விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்றைய தினம் பன்வில பிரதேசத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றிலிருந்து ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது!

மேலும் குறித்த பஸ் மடுல்கல ஊடாக பன்வில நோக்கிச் சென்ற பஸ் சாரதியின் வேககக் கட்டுப்பாடினை இழந்து வீதியை விட்டுச் சென்ற நிலையில் பஸ்ஸினுள் இருந்த 28பேரினுள்  16 பெண்களும் நான்கு ஆண்களும் காயமடைந்து  மடுகல்ல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.