யாழில் ஒரு பிள்ளையின் தந்தை எடுத்த தவறான முடிவு..!

யாழில், ஒரு பிள்ளையின் தந்தை தவறான முடிவை எடுத்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் கடந்த(18) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

இதில் ராஜகிராமம் கரவெட்டி மேற்கைச் சேர்ந்த 6 வயதுடைய பெண் குழந்தையின் தந்தையான செல்வராசா விஜயகுமார் (வயது-31) என்பவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவர் குடும்ப வறுமையின் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.