இலங்கையில் 8,000 பேருக்கு அரசாங்க வேலை வாய்ப்பு!

இலங்கையில் விஞ்ஞான பீடத்தில் டிப்ளோமா பட்டதாரிகள் 8,000 பேரை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகளுக்கு இவர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அமைச்சின் கூற்றுப்படி, விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் தொடர்புடைய பல பாடசாலைகளில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.