நாளை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் நாளை (23ஆம் திகதி) திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக 10 நிமிட நேரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கட்டுரை வினாத்தாள் 3 மணித்தியாலத்தின் பின்னர் மாணவர்களுக்கு மேலதிகமாக 10 நிமிடங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (22-01-2023) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத திணைக்களம் இணைந்து பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.