முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஆறு வீடுகள் உள்ள நிலையில் மக்களிடம் உதவி கோரினாரா?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தொடர்பில்  முன்னாள் முதலமைச்சர் ஒருவர் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளார்.

மைத்திரிபாலவிற்கு மேலதிகமாக மூன்று வீடுகள் உள்ளதாகவும் அவற்றினை அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பெயரில் வைத்திருப்பதாகவும் கொழும்பில் இரண்டு வீடுகளும்  கம்பஹாவில் ஒரு வீடும் இருப்பதாக முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன ஊடகவியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட வேளை இதனை கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 10 கோடி ரூபா நட்டஈடு செலுத்தக் கோரி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இவ் செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!