யாழ் சாவகச்சேரியில் குத்துவிளக்கு வேட்ப்பாளர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்!

நடைபெற இருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில்  ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எனும் பெயரில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிட இருக்கும் வேட்ப்பாளர் ஒருவர் மீது இனம் தெரியாத சில நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் தென்மராட்சி மறவன்புலவு பகுதியில் வைத்து மேற்க் கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.