யாழில் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிய மரண தண்டனை கைதி!

மரண தண்டனை கைதி ஒருவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமானது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மேலும் நான்கு கைதிகள் 2022/23 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேற்படி கைதிகள் வெலிக்கடையில் உள்ள மகசின் சிறைச்சாலை பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் 2022 ஆம் ஆண்டுக்கான 2022/23 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், அது நிறைவேற்றப்படாமல் ஆயுள் தண்டனையாக வழங்கப்படுகிறது.