யாழ். சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிப்போருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

இரத்மலானை மற்றும் யாழ்ப்பாணம். சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்படும் ஒவ்வொருவருக்கும் அறவிடப்படும் புறப்பாடு வரி 50 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் வரி ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த விமான நிலையத்திலிருந்து புறப்படும் நபர்களுக்கான புறப்பாடு வரி 60 அமெரிக்க டொலர்களில் இருந்து 30 அமெரிக்க டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரத்மலானை விமான நிலையத்திலிருந்து புறப்படும் நபருக்கு அறவிடப்படும் புறப்பாடு வரி மார்ச் 26ஆம் திகதி வரையிலும், யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து புறப்படுபவருக்கு விதிக்கப்படும் புறப்பாடு வரி ஜூலை 11ஆம் திகதி வரையிலும் செல்லுபடியாகும் வகையில் திருத்தப்பட்டுள்ளது.

இரத்மலானை மற்றும் யாழ்ப்பாணம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் விமான நிலையங்களுக்கு மட்டும் வரி விலக்கு வரியை திருத்தியமைக்கும் வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாகவும் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.

மத்தள, இரத்மலானை, யாழ்ப்பாணம். சர்வதேச விமான நிலையத்தைத் தவிர வேறு விமான நிலையத்திலிருந்து அல்லது கடல் மார்க்கமாக புறப்படும் எவரும் $60 புறப்பாடு வரி செலுத்த வேண்டும் என ஜனாதிபதி வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.