விலை அதிகரிப்பால் பாண் வாங்குவதை தவிர்த்த மக்கள் ! தீர்வாக பாணின் விலையை குறைக்க திட்டம் !

பாண் விற்பனை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் பாண் விலையை குறைப்பது தொடர்பில் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நாடளாவிய ரீதியில் பேக்கரி உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தையில் தற்போது இரத்தல் பாண் ஒன்று 170 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பான் விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் பான் கொள்வனவு குறைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.