இலங்கையின் சட்டவிரோத மசாஜ் நிலையங்களில் கைதான தாய்லாந்து பெண்கள்!

இலங்கையில் திடீரென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கொழும்பு மற்றும் கல்கிஸை பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்து மசாஜ் நிலையங்களில் பணிபுரிந்த  தாய்லாந்தைச் சேர்ந்த  15 இளம் பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான விசா காலம் முடிவடைந்த நிலையிலும் இலங்கையில் தங்கியிருந்துள்ளனர்.இவர்கள் 15 பேரையும் நாடு கடத்தும் வரை வெலிசறை தடுப்பு முகாமில் தங்க வைக்க நடவடிக்கைகள் மேற்க் கொள்ளப்பட்டுள்ளது!