சதொசாவில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!

சதொசாவில் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையினை குறைக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது அதற்க்கு இணங்க  06 அத்தியாவசிய பொருட்களின் விலையினை குறைக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொசா நிறுவனங்களிலும் இவ் விலை குறைப்பு இடம் பெறவுள்ளது.

அதற்கமைய காய்ந்த மிளகாய் 1கிலோவின் விலையினை – ரூ.1,700வினாலும் ,வெள்ளை அரிசி (உள்நாடு) 1கிலோவின் விலை – ரூ.169வினாலும் , சிவப்பு அரிசி 1 கிலோவின் விலை – ரூ.179வினாலும் ,வெள்ளை நாடு (உள்ளூர்) 1கிலோவின் விலை – ரூ.184வினாலும் ,சிவப்பு பருப்பு 1கிலோவின் விலை – ரூ.365வினாலும் ,கீரி சம்பா 1கிலோ – ரூ.235வாகவும் குறைக்கப்படவுள்ளது