முல்லைத்தீவில் மாணவனை தலைகீழாக தொங்கவிட்டு கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியர்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை தலைகீழாக தொங்கவிட்டு கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்.

குறித்த ஆசிரியர் மாணவர்களை தலைகீழாக தொங்கவிட்டு கடுமையாக தாக்கும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கும் ஆசிரியர் மீது சிறுவர் பாதுகாப்பு அமைப்புகளும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.