நீர்கொழும்பில் பேருந்து சாரதி மேற்கொண்ட தாக்குதலில் நடத்துநர் பலி !

பஸ் டிரைவர் தாக்கியதில் கண்டக்டர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.