யாழில் மின் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழில் ஒரு மாதத்திற்கு மேலாக மின் கட்டண நிலுவையை செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என யாழ் தலைமை பிரதம பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

மின்சாரம் துண்டிக்கப்படும் அதே வேளை மீள் இணைப்பு கட்டணமாக 3 ஆயிரத்து 250 ரூபாய் அறவிடப்படும். அதனைவிட ஆறு மாத காலத்திற்கு மேல் மின் துண்டிப்பு செய்யப்படுவதோடு வாடிக்கையாளர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஆகவே இதுவரை மின் கட்டண நிலுவையை செலுத்தாதவர்கள் விரைந்து செலுத்திக் கொள்ளுங்கள்.