தமிழர் பகுதியில் அரியவகை ஆமையுடன் சிக்கிய இருவர்!

மன்னார் – கீரிபகுதியில் இறைச்சிக்காக கடத்தப்பட்ட ஆமைகளுடன் 2 பேர் கைது!

மன்னார் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கீரி பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 55 வயதுடையவர்கள் என மன்னார் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிருடன் மீட்கப்பட்ட ஆமை 35 கிலோ எடை கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் மீட்கப்பட்ட ஆமைகளை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.