கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மார்ச் 3 – 4ஆம் திகதிகளில்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தலைமையில் நேற்று காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டது.

இதன்படி எதிர்வரும் கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவில் 4500 இலங்கை பக்தர்களையும் 3500 இந்திய பக்தர்களையும் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மதகுருமார்கள் உட்பட ஆயிரம் சிறப்பு விருந்தினர்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.