யாழில் இளைஞன் அடித்துக் கொலை! வெளியான காரணம் !

நேற்று முன்தினம் இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இளவாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர் புஸ்பராசா ​​நிஷாந்தன் (வயது – 29) என்ற இளைஞரே எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவளான் பகுதியில் நேற்று மாலை இரு இளைஞர்கள் சுண்டல் விற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு போதையில் வந்த நபர் ஒருவர், குறித்த இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் கைகலப்பாக மாறியதையடுத்து, குடிபோதையில் வந்த நபர் கம்பியால் தாக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அதன்பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதன் பின்னர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.