யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி மாபெரும் பேரணி!

எதிர்வரும் நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்தி ஏழைகளுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து மட்டக்களப்பு வரை பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது.

அண்மையில் யாழ். மாவட்டத்தில் சிவில் அமைப்புக்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து மன்னார், வவுனியா மாவட்டங்களில் உள்ள மதகுருமார்கள், சிவில் அமைப்புகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடினர்.

தமது போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், வவுனியா மாவட்ட சிவில் அமைப்புகள், மதகுருமார்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மாணவர் சங்கங்களினால் போராட்டத்திற்கு ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.