பிறந்து 30 நாட்களே ஆன குழந்தை இன்று (27-01-2023) தனது தாயிடம் பால் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளது.
இச்சம்பவமானது யாழ். புத்தூர் நவகிரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புத்தூர் நவ்கரி மாதா கோவில்டியைச் சேர்ந்த நிசாந்தசிறி என்பவரின் மூன்றாவது ஆண் குழந்தை தாய் பாலூட்டிக் கொண்டிருந்த வேளையில் திடீரென உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து அச்சுவேலி ஆதார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது குழந்தை உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து குழந்தை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை 31ஆம் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.