சுதந்திர தினம் அன்று விடுதலையாக இருக்கும் அரசியல் கைதிகள்!

இலங்கையின் சுதந்திர தினம் அன்று பெப்ரவரி 4ம் திகதி அன்று மூன்று அரசியல் கைதிகள் விடுதளையகவுள்ளனர்.இவர்களில்  முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் கொலைக் குற்றவாளியை விடுவிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.

மகேஸ்வரன், 2008 ஜனவரி 1ஆம் திகதியன்று கொழும்பின் இந்துக் கோவில் ஒன்றுக்குள் சுட்டுக் வைத்து கொல்லப்பட்டார்.

அதே சமயம் , பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவைக் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காகத் தண்டனை பெற்றவரும் விடுவிக்கப்பட மாட்டார் என கூறப்பட்டுள்ளது.

கொலைக்கு முயற்சித்த தாக்குதலாளியை விடுவிக்க விரும்புவதாக பொன்சேகா நாடாளுமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்ட போதும் , அவரது கையொப்பமிடப்பட்ட ஒப்புதல் வழங்கப்படவில்லை.

அது தொடர்பில் சட்டமா திபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இன்னும் பொன்சேகாவிடம் கலந்தாலோசிக்கவில்லை என அறியப்படுகின்றது.