யாழ் சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் நேற்று மாலை 5.30 அளவில் இவ் விபத்து இடம்பெற்றது விபத்தில் அதே பகுதியை சேர்ந்த சண்முகலிங்கம் பிரதாப் என்ற 37வயது  இளைஞரே உயிரிழந்துள்ளார்.

வீதியை கடக்க முற்ப்பட்ட வேளையில் மற்றுமோர் மோட்டர் சைக்கிளுடன் மோதுண்டு உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.