தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்ப்பாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை!

தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்ப்பாளர்கள் பெண்களிற்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை ஒன்று விடுத்துள்ளனர்.நேற்றைய தினம் கபே அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளனர்.

அத்துடன் இவ் கருத்தரங்கானது கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை உள்ளடக்கி கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம் பெற்றது.