கடலில் நீராடச் சென்ற சிறுவன் மாயம்!

கடலில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்களில்  15 வயது சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளான்.

குறித்த சம்பவம் மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் நேற்று பிர்ப்பகல் இடம் பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது. மாயமாகியுள்ள சிறுவன் நாகர்கோவில் கிழக்கு நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வருகின்றது.

அத்தோடு மற்றுமொரு சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில் குறித்த சிறுவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் காணாமல் போன மற்றைய சிறுவனை தேடும் பணியில் பொலிஸார் கடற்படையினர் மீனவ மக்கள் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.