அடுத்த இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை! வெளியான முக்கிய அறிவிப்பு !

இன்றும் (30) நாளையும் (31) மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு தேவையான நீர்மின்சார உற்பத்திக்காக தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொத்மலை மற்றும் ரந்தேனிகல நீர்த்தேக்கங்களில் இருந்து போதியளவு நீரை விடுவிக்க மகாவலி அதிகார சபையின் நீர் முகாமைத்துவ செயலகம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதால் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதால் நீர்த்தேக்கங்கள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.