மாத்தறையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூவர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை !

மாத்தறை கொட்டபொல தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பிள்ளைகள் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாடசாலை அதிபர் பிரேமவந்த அபேவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.

அப்பாடசாலையில் பயின்று, பசிந்து பபசர (181) , ஒவிந்து பிராபசர (177), டினிந்து பிம்சர (167) ஆகிய மூவரும் கல்வித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே பிரசவத்தில் பிறந்த சகோதரர்கள்.

கொட்டபொல தேசிய பாடசாலையில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்கள் வரிசையில், 181 புள்ளிகளைப் பெற்ற பசிந்து பபசர விளங்குவதாக அப்பாடசாலையின் கனிஷ்டப் பிரிவின் அதிபரான துஷாரா மதரசிங்க தெரிவித்துள்ளார்.