மது போதை தலைக்கேறியதில் நண்பனின் பிறப்புறுப்பை வெட்டிய நபர்!

நேற்றைய தினம் கூரிய ஆயுதத்தால் பிறப்புறுப்பு வெட்டப்பட்டு கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் வியலுவ தல்தென பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனுமதிக்கப்பட்ட நபர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் அளவுக்கு அதிகமாக மது அருந்தி மயக்க நிலையில் இருந்துள்ளார் அப்போது சக நண்பனின் கையில் கிடந்த கூரிய ஆயுதத்தால் மயங்கி கிடந்த நண்பனின் பிறப்புறுப்பை மற்றைய நண்பர் ஒருவர் வெட்டியுள்ளார்.

பிறப்புறுப்பு வெட்டப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளான நபரை மற்றைய நபர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.