நாட்டை மீள கட்டியெழுப்ப சவூதி அரேபியாவின் ஆதரவை எதிர்பார்க்கும் இலங்கை!

நாட்டின் பொருளாதரத்தை மீள கட்டியெழுப்பும் புதிய திட்டத்திற்குள் இலங்கை, கனிய வளத்துறையில் சவூதி அரேபியாவின்ஆதரவை எதிர்பார்ப்பதாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சவூதி அரேபியாவின் தலைநகரில் (ரியாதில்) இடம் பெற்ற “எதிர்கால கனிய வள அமைப்பு” கூட்டத்தின் முடிவில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் கடன்பொறி, வெளிநாட்டு நாணயங்களின் தட்டுப்பாடுகள் போன்றவற்றினால் இலங்கைக்கு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பாட்டுள்ளது இதற்க்கு தீர்வு காண ரணில் தலைமையிலான அரசு பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

நேச நாடுகளின் உதவியோடு நெருக்கடியில் இருந்து மீள்வது தான் இலங்கையின் இலக்காக உள்ளது. அதற்க்கு சவூதி அரேபியாவின் உதவியும் அவசியமாக உள்ளது. கனிய வளத்துறையில் இலங்கை முன்னேற்றம் அடைவதற்கு சவூதி அரேபியா இலங்கையின் இயற்கை வளத்துறைகளில் முதலீடுகளை மேற்க்கொள்ள வேண்டும்.

அத்தோடு . கனிய வளத்துறையிலான முதலீடுகள், கூட்டு ஒப்பந்தங்கள் என்பனவே எமது நாட்டுக்கு அவசியம் இவ்வாறன ஆதரவை  “எதிர்கால கனிய வள அமைப்பு” வழங்க முடியும் அத்தோடு சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடம் இருந்தும் இலங்கை இதனையே எதிர்பார்க்கின்றது.

அத்தோடு கடந்த கால சவால்களில் இருந்து இலங்கை படிப்படியாக மீண்டு வருகின்றது இந் நிலையில் இயற்கை வளங்கள் மற்றும் கனிய வளத்துறைகளில், வௌிநாட்டு முதலீடுகளைச் பெற்றுக் கொள்வதனூடாக நாட்டின் பொருளாதார நெருக்கடியினை போக்கிக் கொள்ள மூடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.