பயணச்சீட்டுக்கு பதிலாக அறிமுகமாகும் புதிய போக்குவரத்து அட்டை!

பேருந்து மற்றும் புகையிரத டிக்கெட்டுக்களுக்கு பதிலாக புதிய  போக்குவரத்து அட்டையை அறிமுகம் செய்வதற்க்கான ஒப்பந்தம் ஒன்று ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.இவ் ஒப்பந்தத்தில் போக்குவரத்து அமைச்சு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபையை உள்ளடக்கி ஒப்பந்தம் மேற்க்கொள்ளப்படுள்ளது.

இத் திட்டம் மாகும்புர மற்றும் காலி அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகளுக்கான இந்தப் புதிய சேவை உடனடியாக ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், வெகு விரைவில் இந்த முறை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு மார்ச் மாத இறுதிக்குள் மொபைல் செலுத்துகைகளும் செயற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கபப்ட்டுள்ளது