ஊடகவியலார்களுக்கு மதிப்பளிக்காமல் வாகனத்தில் ஏறிச் சென்ற சஜித்பிரேமதாஸ

இன்று மட்டக்களப்பு ஆரயம்பதியில்தேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டு வீடு திரும்ப தயாரான நிலையில் இருந்த எதிர்கட்சி சஜித்பிறேமதசாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்ப்பட்ட வேளை பதிலளிக்காது வாகனத்தில் ஏறி ஓடிச் சென்று விட்டார்

மாற்றம் ஒன்று ஏற்ப்பட வேண்டும் அத்துடன் தன்னுடைய தலைமையில் அரசு ஒன்று அமைக்க வேண்டும் என மேடைப் பேச்சுக்களில் பேசிக்கொண்டு திரியும் எதிர்கட்சி தலைவர் பிராந்திய ஊடகவியலார்களின் கேள்களுக்கு பதில் கூறாமல் அலட்சியமாக வாகனத்தில் ஏறி சென்றது ஊடகவியலாளர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

நாட்டின் எதிர்கட்சி தலைவர் என்ற ரீதியில் ஊடகவியாளர்கள் கேள்வி கேட்கும் போதே அதனை மதிக்காமல் செல்பவர் நாளை ஜனாதிபதியானால் எவ்வாறு தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பார் சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவார்.

 ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறைக்கு மதிப்பளிக்காமல் சென்றது அவர் குறித்து பாரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது