யாழில் அதிகாலை வீடுடைத்து இடம்பெற்ற கொள்ளைச்சம்பவம் !

யாழில் அதிகாலையில் கத்தி முனையில் நடந்த கொள்ளையில் பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஏராளமான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இச்சம்பவமானது பருத்தித்துறை திக்கம் பகுதியில் உள்ள வீட்டில் இடம்பெற்றுள்ளது.

இதில் கத்தி முனையில் 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 20 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளையடித்த்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார்
தனிப்படை அமைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.