யாழில் அதிகாலையில் கத்தி முனையில் நடந்த கொள்ளையில் பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஏராளமான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இச்சம்பவமானது பருத்தித்துறை திக்கம் பகுதியில் உள்ள வீட்டில் இடம்பெற்றுள்ளது.
இதில் கத்தி முனையில் 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 20 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து கத்தி முனையில் கொள்ளையடித்த்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார்
தனிப்படை அமைத்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.