யாழில் பொலிஸாரால் கைதான பெண் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்! வெளியான அதிர்ச்சி காரணம் !

யாழில் போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கைது செயயப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானதுஅரியாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த பகுதியினையுயை பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் 29 வயதான பெண்ணும் என தெரியவந்துள்ளது.

இதில் பொலிஸ் உத்தியோகத்தர் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது,

இவர்களிடம் இருந்து 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்ப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.