பெற்ற பிள்ளையே தந்தைக்கு எமனானது

இலங்கையில் பெற்ற பிள்ளையால் கொல்லப்பட்ட தந்தை குறித்த சம்பவம்  ஒன்று கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதர்செட் (பூப்பனை மேல் பிரிவு) தோட்டத்தின் இலக்கம் 26 கங்காணி லயம் என அழைக்கப்படும் தொடர் லயக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது. மூன்று ஆண் பிள்ளைகளின் தந்தையான குமாரவேல் தியாகபிரகாஸ் (வயது 45) என்பர் மூத்த மகனால் பொல்லால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.

கொலப்பட்டவரின் மகன் தந்தையை தாக்கியதாக கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் அயலில் உள்ள வீட்டார் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்