கொழும்பின் பல வீதிகள் மூடப்பட்டுள்ளன.

இன்று பிற்ப்பகல் 3.00 மணி முதல் தொடக்கம் கொழும்பின் பல வீதிகள் முடக்கப்பட்டுள்ளன.

நிதஹஸ் மாவத்தை, நிதஹஸ் சுற்றுவட்டத்தில் இருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கிய வீதி. பதனம் மாவத்தை, ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தை சந்தியில் இருந்து பதனம் மாவத்தை நோக்கிய நுழைவு, பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தை, தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திலிருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கி நுழைவு போன்ற சில பகுதிகள் நடைபெற இருக்கும் இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வின் பாதுகாப்பிற்காக முன் ஏற்பாடாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று இடம்பெறவுள்ள கலாசார இசை நிகழ்ச்சி முடிவடையும் வரை மூடப்பட்டே இருக்கும்