யாழில் இளைஞர்களின் செயலாள் பீதியடைந்த மக்கள் !

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் வாகனப் பேரணி நேற்று (04-02-2023) காலை ஆரம்பமானது.

இந்தப் பேரணி யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கி, அங்கிருந்து கே.கே.எஸ்.சாலையை அடைந்து மருத்துவமனை சாலையை அடைந்து மணிக்கூட்டு கோபுர சாலை வழியாக விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது.

இதில் இளைஞர்கள் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள்களில் சாகசங்களை நிகழ்த்தி மக்களுக்கு ஆபத்தான வகையில் செயல்பட்டனர். இதனால், மக்கள் அச்சத்துடன் வீதிகளில் பயணிப்பதை அவதானிக்க முடிந்தது.