இலங்கையில் பெட்ரோல் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு !

இலங்கையில் பெற்றோல் விலை திடீரென அதிகரிக்கப்பட்டமை எந்தவொரு விலைச் சூத்திரத்தின் பிரகாரமும் மேற்கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

துறைமுகத்தில் இருந்து இறக்கப்படும் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 200 ரூபா எனவும், உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலுக்கு விதிக்கப்பட்ட பாரிய வரி காரணமாக ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 200 ரூபா 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.