முல்லைத்தீவு பகுதியில் புதையல் தோண்டியவர்கள் கைது!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று மாலை கனரக வாகனம் ஒன்றை பயன்படுத்தி புதையல் தோண்ட முற்ப்பட்ட வேளை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில்  8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது புதையல் தோண்ட பயன்படுத்திய  கார் மற்றும் கனரக வாகனம் ஒன்றும் முல்லைத்தீவு பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டவர்களில் இருவர் முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியினை சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய ஆறு நபர்களும் அனுராதபுர பகுதியினை சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைதான சந்தேக நபர்களையும் புதையல் தோண்ட பயன்படுத்திய வாகனங்களையும் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்கள்  தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்