பாலின் விலை இருபது ரூபாவால் அதிகரிப்பு!

பால் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மில்கோ நிறுவனம் பாலின் விலையினை இருபது ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் தற்போது அந்த நிறுவனத்தால் பால் ஒரு லீற்றர்( 1L) 140 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது விலை அதிகரிப்பினை அடுத்து ஒரு லீற்றர் (1L) பால் 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என அதன் தலைவர் ரேணுகா பெரேரா கூறியுள்ளார்.

அவ்வாறு இருக்கையில் தனியார் துறையினர் ஒரு லீற்றர் பாலை 160 ரூபாவிற்கு கொள்வனவு செய்து 450 விற்கு விற்பனை செய்கின்றனர்.