காலநிலை தொடர்பான அறிவிப்பு!

இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. 

அதற்கமைய இன்றைய தினம்(06.02.2023) கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் அறிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தோடு மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை கொழும்பு, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் ஓரளவு மழை பெய்யலாம் என கூறியுள்ளது

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ளவதற்கு மக்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது