விபத்தில் உயிரிழந்த இலங்கை விஞ்ஞானியின் மரணத்திற்கான காரணம் வெளியானது

  கொணபல கும்புக பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த விஞ்ஞானியின் மரணம் குறித்து மேற்க்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவரது மரணம் நிகழ்ந்தமைக்கான காரணம் வெளியானது

விபத்திற்கு உள்ளான காரின்  ஓட்டுனர் இருக்கை பகுதியில் உள்ள காற்றுப்பையில் உள்ள இரும்புத் துண்டு அவரது தொண்டையில் குத்தி சிக்கியதாலே மரணம் ஏற்ப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக ஹொரணை வைத்தியசாலையின் சட்ட வைத்தியர் பிரனீத் விஜேசுந்தர தெரிவித்துள்ளார்