யாழை சேர்ந்த தம்பதியினர் பிரித்தானியாவில் செய்த சாதனையால் குவியும் பாராட்டுக்கள் ! அப்படி என்ன செய்தார்கள் என தெரியுமா ?

பிரித்தானியாவில் வாழும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சஞ்சீவ்குமார் ஆரணி என்ற செல்வச் செழிப்பான தம்பதியினர் பிரித்தானியாவில் மிகப்பெரிய எரிபொருள் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகம் முழுவதும் வர்த்தகம் செய்தனர்.

அவர்களது நிறுவனத்தில் 1,250 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். உலகின் பல்வேறு நாடுகளில் அவர்களுக்கு 11 அலுவலகங்கள் உள்ளன.

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை சுத்திகரிப்பதும், டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றை பிரித்தெடுத்து, எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வழங்குவதும் இவர்களின் முக்கிய தொழில்.

இங்கிலாந்தின் கில்லிங்ஹோமில் லிண்ட்சே ஆயில் சுத்திகரிப்பு ஆலையை வாங்கும் அளவிற்கு அவர்கள் வளர்ந்துள்ளனர்.

பிரிட்டனில் மொத்தம் ஆறு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.

அவை ஸ்டான்லோ, கிரேஞ்ச்மவுத், ஹம்பர், பெம்ப்ரோக், ப்ராக்ஸ் லிண்ட்சே மற்றும் ஃபாவ்லி. அவற்றுள் யாழ் தமிழ் சஞ்சீவ்குமாரின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் Prax Lindsey.

2021-ம் ஆண்டு வரை பிரான்ஸின் பிரபல எரிபொருள் நிறுவனமான டோட்டல் கட்டுப்பாட்டில் இருந்த இந்த சுத்திகரிப்பு நிலையம் தற்போது அவர்களின் கைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

1999 ஆம் ஆண்டில், தம்பதியினர் ஒரு பெட்ரோல் நிரப்பும் நிலையத்தை குத்தகை அடிப்படையில் எடுத்துக் கொண்டனர், இன்று ஒரு நாளைக்கு 113,000 பெல்லட் எரிபொருளை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

அவர்களின் விற்றுமுதல் £8.6 பில்லியன் என்று கூறப்படுகிறது..

Previous articleநேர்காணலிற்கு துப்பாக்கியோடு வந்த அமைச்சர் ! பதறிய தொகுப்பாளர் !
Next articleகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி ! வீதியில் நெல் காயப்போட்டதால் நேர்ந்த விபரீதம் !