புகையிரதத்தில் மோதி நபரொருவர் பலி ! நுவரெலியாவில் இடம்பெற்ற சோகம் !

நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (07-02-2023) காலை 10.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அருகில் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் சுமார் 50 வயதுடையவர் எனவும், அவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் அட்டன் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவ பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நபர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.