லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு !

லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் இல்லாத வீடுகள் இனங்காணப்பட்டு கொள்வனவு செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதிய கொள்கலன் கையிருப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், வர்த்தக எரிவாயு கொள்கலன்களை ஆர்டர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு அல்லது மூன்று கொள்கலன்களை வைத்திருக்கும் குடும்பங்கள் மக்களுக்கு கொள்கலன்களை விநியோகிக்கும் போது அவற்றை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

இதன் காரணமாக ஒரு கொள்கலன் கூட இல்லாத குடும்பங்களுக்கு அவற்றை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென தலைவர் மேலும் தெரிவித்தார்.