இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

துருக்கில் உள்ள இலங்கை மக்களின் தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு அல்லது தூதரகத்திற்கு தெரியப்படுத்துமாறு துருக்கிக்கான இலங்கை தூதுவர்  ஹசந்தி திஸாநாயக்க இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அருகில் இருந்த 15 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் துருக்கியில் உறவினர்கள் இருப்பின் அவர்களை தொடர்பு கொள்ள விசேட தொலைபேசி இலக்கமும் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. 009 03 124 271 032, 009 05 344 569 498 ஆகிய இரண்டு அவசர எண்கள் மூலம் தொடர்பினை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது